வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
பொன்னேரி: பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன், 22. ெவளியூர் சென்றிருந்தார். நேற்று காலை, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீடு திரும்பிய மாதவன், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, நான்கு சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி, மொபைல்போன், 50,000 ரூபாய் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிந்ததுஇது குறித்து மாதவன் திருப்பாலைவனம் போலீசில் புகார் அளித்துள்ளார்.