உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலத்தகராறில் இருதரப்பு மோதல் 11 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

நிலத்தகராறில் இருதரப்பு மோதல் 11 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

திருத்தணி:திருத்தணி அருகே நிலத்தகராறு காரணமாக, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, 11 பேர் மீது வழக்கு பதிந்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 40. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அன்பழகன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கட்டை மற்றும் கல்லால் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில், 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று அய்யப்பன், செங்குட்டுவன், சசிகுமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை