குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத் தலைமையில் நடந்தது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளிக்கு வரும் மாணவியருக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால், ஆசிரியர்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியர் தங்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என, கூட்டத்தில் பேசப்பட்டது.