உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

 பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். நேற்று ஞாயிறு விடுமுறை நாள் ஆனதால், காலை முதல் வாகனங்களில் அதிகளவு பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி நேர்த்திக் கடன் செய்தல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றினர். அதிகளவு பக்தர்கள் குவிந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி