உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மருத்துவமனையில் கணவர் மரணம்: மனைவி புகார்

திருவள்ளூர் மருத்துவமனையில் கணவர் மரணம்: மனைவி புகார்

திருவள்ளூர், கடம்பத்துார் ஒன்றியம் கீழ்நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 39. கடந்த 20ம் தேதி வீட்டிலிருந்த இவர், இரவு 11:00 மணியளவில் திடீரென வாந்தி எடுத்தார்.இதையடுத்து, இவரதுமனைவி மாலதி, 32, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவமனையில் அவர் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.பின், மறுநாள் 21ம் தேதி காலை அவரது மனைவி டீ குடிக்க எழுப்பியபோது மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். இதையடுத்து தகவல்அறிந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து மாலதி அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை