உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காக்களூர் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் அவலம்

காக்களூர் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் அவலம்

காக்களூர்:காக்களூர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் குறுகலாக உள்ளதால், இடநெருக்கடி காரணமாக, மாணவர்கள் மரத்தடியில் பயின்று வருகின்றனர்.திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சி, திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சாலையோரம் அமைந்துள்ள இப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில், மாணவ - மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லை. வகுப்பறை குறுகலாக உள்ளதால், இடநெருக்கடியில் மாணவ - மாணவியர் சிரமத்துடன் பயின்று வருகின்றனர்.குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் பாடங்கள் ஒருங்கிணைத்து கற்பிக்கப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர், குறுகலான வகுப்பறையில் அமர்ந்து பயில முடியாமல் அவதிப்படுகின்றனர்.தற்காலிக ஏற்பாடாக பள்ளி ஆசிரியர்கள், ஒருங்கிணைந்து செயல்படும் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ - மாணவியரை, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமரவைத்து, பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.மழை, வெயில் காலத்தில் மரத்தடியில் பயிலும் மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, விசாலமான இடவசதியுடன் கூடிய வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை