உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ரயிலில் பயணி தவறவிட்ட லேப்டாப் மீட்டு ஒப்படைப்பு

 ரயிலில் பயணி தவறவிட்ட லேப்டாப் மீட்டு ஒப்படைப்பு

சென்னை: ரயிலில் பயணி தவறவிட்ட 90,000 ரூபாய் மதிப்பிலான 'லேப்டாப்'பை ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று காலை கன்னியாகுமரி விரைவு ரயில் வந்தது. அதில் பயணித்த விபின், 35, என்பவர், தன் 'லேட்டாப்'பை மறந்து வைத்துவிட்டு, இறங்கி சென்றுள்ளார். பின், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின், எஸ்.ஐ., அன்பு செழியன் ஆகியோர் ரயில்வே அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த விரைவு ரயில் பராமரிப்பு பணிக்காக சேத்துப்பட்டு பணிமனைக்கு சென்றாக தெரிவித்தனர். இதையடுத்து, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விபின் பயணம் செய்த இருக்கையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு லேப்டாப் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புகார் அளித்த விபினை வரவழைத்து, லேப்டாப் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை