உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணவாளநகர் ஈஸ்வரர் கோவிலில் வரும் 10ல் மஹா கும்பாபிஷேகம்

மணவாளநகர் ஈஸ்வரர் கோவிலில் வரும் 10ல் மஹா கும்பாபிஷேகம்

மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ளது மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில். இங்கு, வரும் 10ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.முன்னதாக இன்று, காலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷக நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.வரும் 7ம் தேதி கும்பாலங்கரமும், கும்ப பூஜையும் முதல்கால பூஜையும் நடைபெறும்.மஹா கும்பாபிஷேக நாளான, வரும் 10ம் தேதி, காலை 5:00 மணிக்கு கலச புறப்பாடும், காலை 5:15 மணிக்கு விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.காலை 5:30 மணிக்கு மங்கள ஈஸ்வரர், மங்கள ஈஸ்வரி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.மாலை 6:00 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், திருவீதியுலாவும் நடைபெறும். பின், தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ