உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையை கடக்க முயன்றவர் பலி

சாலையை கடக்க முயன்றவர் பலி

கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பச்சு கேவாட், 38; கவரைப்பேட்டை அடுத்த, போரக்ஸ் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து, ஆந்திரா நோக்கி சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை