மேலும் செய்திகள்
ஏரியில் ஆண் சடலம் மீட்பு
26-Aug-2025
திருத்தணி:அரசு பேருந்து படிக்கட்டில் சென்ற, 10ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து படுகாயமடைந்தார். திருத்தணி அடுத்த வேலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமு மகன் ஜெய், 15. இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும், திருத்தணிக்கு டியூஷனுக்கு சென்றார். மாலை 6:00 மணிக்கு டியூஷன் முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு, சிவாடா செல்லும் அரசு பேருந்தில் ஏறினார். பேருந்தில் பயணியர் கூட்டம் அதிமாக இருந்ததால், படியில் தொங்கியவாறு சென்றார். திருத்தணி ம.பொ.சி.சாலை தனியார் பள்ளி அருகே சென்றபோது, படியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Aug-2025