உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு

ஆர்.கே.பேட்டை:காணாமல் போன மூதாட்டி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆர்.கே.பேட்டை அடுத்த பந்திகுப்பம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சரோஜா, 70. இவர், அப்பகுதியில் உள்ள மகள் சின்னபொண்ணு வீட்டில் வசித்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 18ம் தேதி மாயமானார். நேற்று காலை பந்திகுப்பம் அருகே உள்ள விவசாய கிணற்றில், பெண் சடலம் மிதப்பதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தது சரோஜா என தெரியவந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி