உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிந்தலகுப்பம் குளம் படுமோசம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

சிந்தலகுப்பம் குளம் படுமோசம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தலகுப்பம் கிராமம். அங்கு, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, இக்குளத்தை அப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர்.அதன்பின், முறையாக பராமரிப்பு பராமரிக்காததால், அப்பகுதியை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் மற்றும் குப்பை குவிக்கும் பகுதியாக குளம் மாறியது. தற்போது, செடி, கொடிகள் சூழ்ந்து, குளம் துார்ந்து போனதுடன், கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது.எனவே, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து குளத்தை துார்வாரி, முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை