நந்தியாற்றில் முட்செடிகளை அகற்ற கோரிக்கை
திருத்தணி:நந்தியாற்றில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருத்தணி வழியாக செல்லும் நந்தியாற்றில் 1 கி.மீ., துாரத்திற்கு அதிகளவில் முட்செடிகள் வளர்ந்துள்ளன.இந்த முட்செடிகளால், ஆற்றில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நந்தியாற்றில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.