உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை

அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை

திருவாலங்காடு;திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது, சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு, கனகம்மாசத்திரம் - தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளி வளாகத்தை சுற்றி, 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்த சுற்றுச்சுவரை சமூக விரோதிகள் சிலர் உடைத்ததால், தற்போது சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்து, உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் விளையாடும் போது அசம்பாவிதம் நிகழும் வாய்ப்பு இருப்பதுடன், பாம்பு, விஷப்பூச்சிகள் உள்ளே வரும் நிலை உள்ளதால், பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, பள்ளி வளாகத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்