உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணவூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

மணவூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவூர் ஊராட்சியில், 10,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றி மருதவல்லிபுரம், பாகசாலை, எல்.வி.புரம், குப்பம்கண்டிகை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.ஆனால், இப்பகுதிக்கு மருத்துவமனை வசதி இல்லாததால், இப்பகுதி வாசிகள் அவசர சிகிச்சைக்கு, 10 -- 13 கி.மீ., துாரம் கடந்து, திருவாலங்காடில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.மேலும், இரவு நேரங்களில் போக்குவரத்து வசதி இல்லாததால், கர்ப்பிணியர் மற்றும் விபத்தில் சிக்குவோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இரவில் கர்ப்பிணியருக்கு பிரசவ வலி ஏற்பட்டாலோ, சிறிய விபத்தில் காயம் ஏற்பட்டாலோ, திருவாலங்காடு அல்லது திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு வாரம் ஒருமுறை திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனை மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.அதை பெற, 10 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதுடன், இரண்டு மணி நேரம் காத்திருந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் சூழல் உள்ளது. மேலும், போக்குவரத்து இல்லாமலும் செலவீனம் அதிகமாகிறது. இதனால், கர்ப்பிணியர் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே, 20 கிராமத்திற்கு மைய பகுதியாக உள்ள மணவூரில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, மாவட்ட சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை