உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் ரூ.12.97 கோடி பணிகள் ரத்து: அதிகாரிகள் அலட்சியத்தால் கலெக்டர் அதிரடி

திருவள்ளூரில் ரூ.12.97 கோடி பணிகள் ரத்து: அதிகாரிகள் அலட்சியத்தால் கலெக்டர் அதிரடி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 2023 - 24ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானியத்தில் வழங்கப்பட்ட பணிகளை துவக்காமல், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர், 12.97 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப் பணிகளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 - 24ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 14 ஒன்றியங்களுக்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், சில பணிகள் துவக்கப்படாமல் உள்ளன. பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து, 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சித் துறை இணையதளத்திலும் நீக்கம் செய்ய வேண்டுமென, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமெனவும் தெரிவித்தார். இதில், முதல் மூன்று இடங்களை வில்லிவாக்கம், திருத்தணி, மீஞ்சூர் ஆகிய ஊராட்சிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பல்வேறு ஊராட்சிகளில் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒன்றியம் ரத்து செய்யப்பட்ட நிதி வில்லிவாக்கம் 3,32,46,204 திருத்தணி 2,59,85,753 மீஞ்சூர் 1,52,68,773 திருவாலங்காடு 1,39,27,665 பூந்தமல்லி 91,51,485 கும்மிடிப்பூண்டி 82,01,361 பூண்டி 81,65,422 எல்லாபுரம் 76,39,343 ஆர்.கே.பேட்டை 25,42,396 கடம்பத்துார் 18,05,895 பள்ளிப்பட்டு 15,03,972 திருவள்ளூர் 14,83,825 புழல் 4,61,626 சோழாவரம் 3,53,198 மொத்தம் 12,97,33,918


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை