உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய லாரி பறிமுதல்: மூவர் கைது

மணல் கடத்திய லாரி பறிமுதல்: மூவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு கிராமத்தில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து, 10 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட, கும்மிடிப்பூண்டி அருகே ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 32, திருவள்ளூர் மாபாஷா, 42, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 28, ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை