உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி வகுப்பறைக்கு பெயின்ட் அடித்த மாணவர்களால் அதிர்ச்சி

பள்ளி வகுப்பறைக்கு பெயின்ட் அடித்த மாணவர்களால் அதிர்ச்சி

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஆறு முதல் பிளஸ் 2 வரை 650-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக ராஜுவ் உள்ளார்.இப்பள்ளியில், சில நாட்களில் ஆண்டு விழா கொண்டாட உள்ளதால், மாணவர்களிடம் பணம் வசூல் செய்து, வகுப்பறைக்கு பெயின்ட் அடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாணவர்களே பெயின்ட் அடிக்க வேண்டும் என, தலைமையாசிரியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்குள், ஆபத்தான முறையில் ஜன்னல் மீது ஏறி பெயின்ட் அடிக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 10ம் வகுப்பு பொது தேர்வு துவங்க உள்ள நிலையில், மாணவர்கள் படிப்பை ஊக்குவிக்காமல், வகுப்பறைக்கு பெயின்ட் அடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்தத பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ