உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  எஸ்.ஐ.ஆர்., திருத்தம் 3 நாள் சிறப்பு முகாம்

 எஸ்.ஐ.ஆர்., திருத்தம் 3 நாள் சிறப்பு முகாம்

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், படிவம் பூர்த்தி செய்வதற்காக, இன்று முதல் மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தை வீடு வீடாகச் சென்று வழங்கி, பூர்த்தி செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வசதியாக, ஓட்டுச் சாவடி மையங்களில், இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, மூன்று நாட்கள், மாலை 3:00 மணி முதல் 6:00 மணி, வரை உதவி மையம் செயல்பட உள்ளது. வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புதல் தொடர்பான சந்தேகத்தை நிவர்த்தி செய்து அவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி