உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயணியரை காப்பாற்றி உயிரிழந்த பஸ் ஓட்டுனர்

பயணியரை காப்பாற்றி உயிரிழந்த பஸ் ஓட்டுனர்

ஊத்துக்கோட்டை:திருத்தணி அருகே, புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமநாதன், 31. திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் மதியம் திருவள்ளூர் -- பென்னலுார்பேட்டை மார்க்கத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார். வெள்ளாத்துக்கோட்டை அருகே சென்றபோது, ஹேமநாதனுக்கு வலிப்பு ஏற்பட்டது.ஆனால், பயணியருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். அதன்பின், சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரிக்கு பயணியர் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை