உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய கார் பறிமுதல்

மணல் கடத்திய கார் பறிமுதல்

திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் புட்லுார் ரயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காக்களூர் - புட்லுார் சாலையில் வந்த 'மகிந்திரா பொலிரோ' காரை போலீசார் நிறுத்தினர்.போலீசாரை கண்டதும், காரை நிறுத்தி விட்டு ஓட்டுனர் தப்பியோடினார். காரை சோதனை செய்ததில், கால் யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் காரை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை