உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அந்தேரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

அந்தேரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தில் உள்ள அந்தேரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் கணபதி மற்றும் நவகிரக ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் 108 கலசங்கள் வைத்து, மூன்று கால யாக சாலை பூஜைகள் நடந்தன.நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், காலை 8:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்தின் மீதும், மூலவர் மீதும் கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை