உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்டைகளாக காட்சியளிக்கும் சாலை தினமும் 8 போடும் வாகன ஓட்டிகள்

குட்டைகளாக காட்சியளிக்கும் சாலை தினமும் 8 போடும் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ஐ.ஆர்.டி., ரயில்வே கேட் வரையிலான 300 மீட்டர் சாலை, பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய சாலையாக உள்ளது.தாசில்தார் அலுவலகம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், போக்குவரத்து துறையின் வாகன ஓட்டுனர் பயிற்சி பிரிவு வளாகம், ஓய்வூதியம் தொடர்பாக கருவூலம் செல்வோர் என, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்த தொடர் மழையால், சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி, குட்டைகள் போல் காட்சியளிக்கின்றன. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைந்து நெளிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தினர், துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக இச்சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழைநீர் வடிந்து செல்ல கால்வாய் அமைக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி