வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திருத்தணி நகரருக்கு அடுத்த மக்கள் தொகை அதிகமாக உள்ள ஊர் பொதட்டூர்பேட்டை என்பது அனைவரும் அறிந்ததே அந்த ஊருக்கு இணைப்பு சாலைகள் உருவாக்கும் நிலை இருந்தாலும் நெடுஞ்சாலை சாலை துறை அவற்றை செயல்படுத்தாமல் உள்ளது. திருத்தணி-பொதட்டூர்பேட்டை-பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை SH106 பல வலைவுகளை கொண்டதாக உள்ளது பள்ளிப்பட்டு தாலுகாவை எடுத்துக்கொள்ளுங்கள் பள்ளிப்பட்டு ஆந்திராவின் ஒருபகுதியாக மாறி விட்டது அந்த வகையில் வளர்ச்சி தான் ஆனால் தமிழ் நாடு என்ற வகையில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. ஆனால் பொதட்டூர்பேட்டை எதுவுமே இல்லாத தீவாக உள்ளது. எங்கள் ஊருக்கு உள்ள ஒரே மாநில நெடுஞ்சாலை பள்ளிப்பட்டு-பொதட்டூர்பேட்டை-திருத்தணி SH106 மட்டும் ஆனால் தற்போது பெரிய சரக்கு வண்டிகள் இயக்க பயன்படுத்த முடியவில்லை. அரவாசபட்டடை ஊரில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்த அரசு ஏன் சொரக்காய்பேட்டை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டவில்லை சிந்திக்க வேண்டும். இதனால் பொதட்டூர்பேட்டை வளர்ச்சி எந்த அளவுக்கு தடைப்பட்டது என்பது கணக்கிட முடியாது. பொதட்டூர்பேட்டை நகரி இரயில் நிலையம் சாலை நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே உள்ளது. எந்தளவுக்கு நாங்கள் பின் தங்கி உள்ளோம் எனப்புரிகிறதா? நாங்கள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல எல்லா வகையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். எங்கள் ஊர் இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் தாலுக்காவோ? ஒன்றியமோ? கூட இல்லை சாலை மேம்பாடும் இல்லை எந்த வித அரசு அலுவலகங்களும் இல்லை இந்த சாலை மேம்படுத்த கோரிக்கை வைக்கிறேன் 1 சொரக்காய்பேட்டை வழியாக புத்தூர் சாலை, 2 நகரி இரயில் நிலையம் சாலை, 3 மத்தூர் வழியாக திருத்தணி சாலை, 4 காக்களூர் - நொச்சிலி வழியாக திருத்தணி சாலை