திருவள்ளூர்: புகார் பெட்டி;சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றுங்கள்
சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றுங்கள்
திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அம்பேத்கர் நகரில், மின்கம்பம் ஒன்று சேதமடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் அடிபாகம் முழுவதும் சேதமடைந்து சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் மடங்கி காணப்படுகின்றன.இதனால் காற்று வேகமாக வீசினால் மின்கம்பம் விழும் என்ற அபாய நிலை உள்ளது. எனவே மின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ.திலீப்குமார்திருவாலங்காடு.