உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி முருகன் கோவில் குளம் புத்துயிர் பெற நடவடிக்கை வருமா?

கும்மிடி முருகன் கோவில் குளம் புத்துயிர் பெற நடவடிக்கை வருமா?

கும்மிடிப்பூண்டி:சீரழிந்து வரும் கும்மிடிப்பூண்டி முருகன் கோவில் குளத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் முகப்பில் பரந்து விரிந்து காணப்படும் அழகிய குளத்தை முறையாக பராமரிக்க தவறியதால், குளத்தின் உட்புறத்தை சுற்றி புதர்கள் மண்டியுள்ளன. மேலும், படிக்கற்கள் தெரியாத அளவிற்கு செடி, கொடிகள் படர்ந்துள்ளன. குளம் துார்ந்து போய் உள்ளதால், மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளத்தின் வெளிப்புறத்தில் குப்பை குவிக்கப்படுவதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. குளத்தின் தெற்கு திசையில் இருந்த சுற்றுச்சுவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. மற்ற திசைகளில் உள்ள சுற்றுச்சுவரும் விரிசல் அடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. கும்மிடிப்பூண்டி பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த குளம், தற்போது சீரழியும் நிலையில் உள்ளது. எனவே, குளத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை