உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி ஜி.என்.டி., சாலையின் மைய தடுப்பு இடம் மாறுமா?

கும்மிடி ஜி.என்.டி., சாலையின் மைய தடுப்பு இடம் மாறுமா?

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையின் மைய தடுப்பை இடம் மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், 3.5 கி.மீ., நீளத்திற்கு பஜார் பகுதி அமைந்துள்ளது. இச்சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன், சாலையின் மொத்த அகலத்தை கணக்கிடாமல், பயன்பாட்டில் உள்ள சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டது. அதன்பின், ஜி.என்.டி., சாலையின் இருபுறமும் எல்லை நிர்ணயித்து, கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது, ஒரு பக்க கால்வாய், சாலை மைய தடுப்பில் இருந்து, 30 - 40 அடி துாரத்திலும், மறுபுறம் உள்ள கால்வாய், 60 - 100 அடி துாரத்திலும் உள்ளன. இதனால், 40 அடி அகலம் உள்ள சாலையில், சாலை ஆக்கிரமிப்பு கடைகள் போக, மீதமுள்ள சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. பரபரப்பான காலை - மாலை நேரங்களில், இந்த 40 அடி சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையினர், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம், இருபுறம் உள்ள கால்வாய்களுக்கு இடையே உள்ள மைய பகுதியை கணக்கிட்டு, தடுப்பு அமைக்க வேண்டும். இதனால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !