உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலை பறிமுதல்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து படகு வாயிலாக இலங்கைக்கு பீடி இலைகள், பூச்சி கொல்லி மருந்துகள் உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.கியூ பிரிவு போலீசார், துாத்துக்குடி தருவைகுளம் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை நின்றிருந்த 'ஈச்சர்' வேனை திடீரென சோதனையிட்டனர். அதில், 30 கிலோ எடை கொண்ட 62 மூட்டைகளில் பீடி இலை இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, இரண்டு டன் பீடி இலைகள், வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 30 லட்சம் ரூபாய். இத்தகைய பீடி இலைகளை உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ