உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கார் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

கார் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

துாத்துக்குடி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆனையூரை சேர்ந்த ராஜு, 28, உட்பட 60 பேர் திருச்செந்துார் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அதிகாலை, 5:00 மணியளவில் திருச்செந்துாருக்கு அருகே அடைக்கலாபுரம் பகுதியில் அவர்கள் நடந்து சென்ற போது, பின்னால் வந்து கொண்டிருந்த கார் ராஜு மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்செந்துார் தாலுகா போலீசார் காரை ஓட்டிச் சென்ற தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீநாத், 29, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி