உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அடுத்த மாதம் அரசு கேபிள்டிவி தூத்துக்குடியில் செயல்பட வாய்ப்பு

அடுத்த மாதம் அரசு கேபிள்டிவி தூத்துக்குடியில் செயல்பட வாய்ப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் அரசு கேபிள் டிவி செயல்படும் வாய்ப்பு இருப்பதாக கலெக்டர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார். அரசு கேபிள் டிவி எப்போது மாவட்டத்தில் துவங்கும் என்று நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் ஆஷீஷ்குமார் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இது சம்பந்தமான முறையான தகவல் அரசிடம் இருந்து தான் வரவேண்டும். அநேகமாக அடுத்த மாதம் அரசு கேபிள் டிவி துவங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். இது சம்பந்தமாக கலெக்டர் டி.ஆர்.ஓவிடம் கேட்டார். அரசு கேபிள் டிவி சம்பந்தமாக சண்முகசுந்தரம் என்பவரிடம் டயிப் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக டி.ஆர்.ஓ அமிர்தஜோதி குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ