மேலும் செய்திகள்
வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்
16 hour(s) ago
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
திருப்பத்துார்:திருப்பத்துார், கோட்டை தெருவைச் சேர்ந்தவர் நதீம், 40. இவர், சாலையில் திரியும் மாடுகளை கொடூரமாக கத்தியால் வெட்டி காயப்படுத்தி வந்தார். இதுவரை, 10க்கும் மேற்பட்ட மாடுகளை வெட்டியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு சாலையில் சுற்றி திரிந்த, மத்தின் என்பவருடைய மாட்டை கத்தியால் வெட்டியுள்ளார். இதை மத்தின் மொபைலில் வீடியோ எடுத்து அப்பகுதி மக்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த காயம்பட்ட, பிற மாடுகளின் உரிமையாளர்கள், நதீமின் வீட்டை முற்றுகையிட்டனர்.திருப்பத்துார் டவுன் போலீசார், நதீமை விசாரணைக்கு அழைத்து சென்றதையடுத்து, முற்றுகையை கைவிட்டனர்.
16 hour(s) ago
04-Oct-2025
01-Oct-2025