உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி

ஆம்பூர் : திருப்பத்துார் அருகே, சாலையை கடக்க முயன்ற, 2 தொழிலாளிகள் கார் மோதி பலியாகினர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு புதுமனையை சேர்ந்தவர்கள் தனியார் நிறுவன தொழிலாளிகள் மகாதேவன், 45, அண்ணாமலை, 45; இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் வட புதுப்பட்டு பகுதியில், சாலையை கடக்க முயன்றனர். அப்போது, வேலுாரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார், அவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை