உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்டைத்திடலில் திருட்டு

குட்டைத்திடலில் திருட்டு

உடுமலை : உடுமலை குட்டை திடல் பகுதியிலுள்ள நான்கு வீடுகளில் நேற்று முன்தினம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ரசூல் சந்தை சேர்ந்த ஷேக் முகமது(60) என்பவரது வீட்டின் பின்பக்கமாக வந்த திருடர்கள் 2 சவரன் நகைகளை திருடி சென்றனர். அருகிலுள்ள திரு.வி.க., தெருவை சேர்ந்த அப்துல் ரஷீத்(47) வீட்டில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடி சென்றுள்ளனர். அடுத்ததாக தங்கவேல் வீட்டில் 4 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணமும், ஜின்னாசந்து மருதமுத்துகுமார்(45), மற்றும் ஆறுமுகம் வீட்டில் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை