உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 9 ஓட்டுச்சாவடிகளில் தி.மு.க., கூட்டணியை காட்டிலும் அதிக ஓட்டுகள் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் பா.ஜ., அபாரம்

9 ஓட்டுச்சாவடிகளில் தி.மு.க., கூட்டணியை காட்டிலும் அதிக ஓட்டுகள் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் பா.ஜ., அபாரம்

இவற்றில் சில ஓட்டுச் சாவடிகள் அமைந்துள்ள வார்டுகள் தி.மு.க., வசம் உள்ளன. இவற்றில் தி.மு.க., நிர்வாகிகள் முறையாகப் பணியாற்றவில்லை. இதனால், தான் பா.ஜ., கூடுதல் ஓட்டுகளைப் பெற்றுள்ளனர். தொகுதியில் கட்சி தோல்வியுற்றால் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது. இது வார்டு நிர்வாகிகளுக்கும் பொருந்தும்; குறைவான ஓட்டுகள் பெற்ற வார்டு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பிரச்னை குறித்து உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சோழநாடன்
ஜூன் 11, 2024 12:45

அந்த வாக்குச்சாவடியில பாஜக அதிக ஓட்டு வாங்கியது.. இந்த வாக்குச்சாவடியில் பாஜக அதிக ஓட்டு வாங்கியது.. சரி... இப்ப என்ன? திருப்பூரில் பாஜக வெற்றி என்று அறிவித்துவிடலாமா? பெற்றது தோல்வி.. இதில் நாங்க அதிக ஓட்டு வாங்கிவிட்டோம் என்ற பீத்தல்.. போங்கப்பா. போய் புள்ளக்குட்டிய படிக்க வைங்கப்பா. அவுங்க எதிர்காலம்தான் முக்கியம். பாஜக எதிர்காலம்தான் முக்கியமா..... எங்கபோயி முட்டிக்கொள்வது என்பது தெரியவில்லை.


Anbuselvan
ஜூன் 11, 2024 16:02

நண்பரே எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு இப்போது பலம் இருக்கிறதோ 2026 தேர்தலில் அங்கே போட்டி இடதான் இத்தகைய ஆராய்வுகள். இதே ஆராய்வை திமுகவும் செய்து இருக்கும். அவர்கள் பார்வையில் எந்தெந்த இடங்களில் தங்களது கட்சி பலவீனமாக உள்ளது என தெரிந்து அதை இவர்த்தி செய்வதற்கு. இதுதான் விஷயம். புரிந்து கொண்டால் சரி.


Sampath Kumar
ஜூன் 11, 2024 11:30

பீத்திக்க வேண்டியது தான் ஆனாலும் பைசா பிரயோசனம் இல்லை உங்க கட்சி கூட்டணி வைத்து வாங்கி உள்ளது இது தான்


INDIAN
ஜூன் 11, 2024 10:25

மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் நான்கு சுற்றுகள் முடிவில் மோடி பின் தங்கியிருந்தார், திருப்பூறில் 9 ஓட்டு சாவடியில் பாஜக அதிகம் ஓட்டு வாங்கியது அபாரம் என்றால், மொத்தம் உள்ள 18 சுற்றுகளில் 4 சுற்றுகளில் பின் தங்கியிருந்த மோடிக்கு எப்படி செய்தி போடுவீர்கள், நான்கு சுற்றுகளில் பின்தங்கியிருந்தபோதும் மோடி வெற்றி பெற்ற அபாரம், ஏனெனில் உங்களுக்கு இதுபோல போடுவது தொழில், உண்மை மக்கள் அறிவர்


Indian
ஜூன் 11, 2024 09:22

மக்கள் சிந்தித்து படித்து ஓட்டு போட வேண்டும் அப்படித்தானே சார்


Mohan Raj
ஜூன் 11, 2024 08:01

மக்கள் தெளிவாக சிந்துத்து ஓட்டு அளித்ததால் இந்த பிரச்சினை வராது


Raj
ஜூன் 11, 2024 06:46

என்ன செய்வது கலிகாலம்.... ஒன்றும் செய்யமுடியாது... தமிழக மக்கள் தேர்ந்தெடுகிறார்களே......


சமீபத்திய செய்தி