உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடைவெளியின்றி மையத்தடுப்பு மறியலில் ஈடுபட மக்கள் முயற்சி

இடைவெளியின்றி மையத்தடுப்பு மறியலில் ஈடுபட மக்கள் முயற்சி

பல்லடம்;மாதப்பூர், - பல்லடம் வரை மையத்தடுப்பு அமைக்கப்பட்டு வரும் நிலையில், இடைவெளியின்றி மையத்தடுப்பு அமைப்பதாக கூறி, பனப்பாளையம் பகுதி கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:தாராபுரம் ரோடு பிரிவில் இருந்து சமத்துவபுரம் வரை, 2 கி.மீ., துாரத்துக்கு இடைவெளியின்றி மையத்தடுப்பு அமைக்கப்படுகிறது. கறிக்கோழி பண்ணை வேன்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்துச் செல்ல வரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அரிசி ஆலை லாரிகள் அதிக செல்கின்றன.இவ்வாறு வரும் வாகனங்கள், சமத்துவபுரம் சென்று திரும்பி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், தேவையற்ற பொருட்செலவு, கால விரயம் ஏற்படுகிறது. இடைவெளி விட்டு மைய தடுப்பு அமைக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.இது குறித்து டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளிடம் பேசிய பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை