உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

உடுமலை:கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த ரயில்களில் தினமும் உடுமலைக்கு நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். மேலும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ஏராளமானோர் வருகின்றனர்.மேலும், அங்கு பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கேமரா அமைக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை