உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரு கிலோ தக்காளி விலை ரூ.7 வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.7 வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

உடுமலை;திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மூன்று மாதத்திற்கு முன், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனதால், அதிகளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர்.கடந்த மாதம் வரை, ஒரு பெட்டி, 600 முதல், 700 ரூபாய் வரை விற்றது. தற்போது, தக்காளி வரத்து அதிகரித்து, தினமும், ஒரு லட்சம் பெட்டிகள் வரை சந்தைகளுக்கு வரத்து காணப்படுகிறது. நேற்று, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, 60 முதல், 100 ரூபாய் வரை மட்டுமே விற்றது. ஒரு கிலோ, 4 - 7 ரூபாய் வரை மட்டுமே விற்பதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.விவசாயிகள் கூறியதாவது:தக்காளி சாகுபடிக்கு, உழவு, நாற்று, உரம், மருந்து, இடு பொருட்கள் என, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆயிரம் முதல், 1,200 பெட்டிகள் மட்டுமே மகசூல் கிடைக்கிறது.காய் பறிக்க கூலி, போக்குவரத்து கட்டணம், சுங்க கட்டணம், கமிஷன் செலவை விட, குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டம் ஏற்படுகிறது. பலர் காய்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளதோடு, செடிகளை அழிக்கவும் துவங்கியுள்ளனர். ஆண்டு தோறும், தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, தக்காளி சாகுபடி பரப்பு அதிகரிப்புக்கு ஏற்ப, விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கவும், தக்காளி சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்படும் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் இருப்பு வைத்து விற்பனை செய்யும் குளிர்பதன கிடங்கு வசதிகளை உடுமலை பகுதிகளில் அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை