உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு அகலுமா... கல்லுாரி சுவர் சீரமைப்பு எப்போது?

பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு அகலுமா... கல்லுாரி சுவர் சீரமைப்பு எப்போது?

ரோடு மோசம்அவிநாசியில் இருந்து ரங்கா நகர் செல்லும் ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். ரோடு போட வேண்டும்.- சண்முகசுந்தரம், பழங்கரை. (படம் உண்டு)திருப்பூர், ராக்கியாபாளையம், காளியப்பா நகர், 2வது வீதியில் தார் ரோடு போட வேண்டும். சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது.- ஜீவித்குமார், காளியப்பா நகர். (படம் உண்டு)மின்கம்பம் 'கிடுகிடு'திருப்பூர், மில்லர் ஸ்டாப், லட்சுமி நகர் மெயின் ரோட்டில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும்.- ஜெகதீஷ், லட்சுமி நகர். (படம் உண்டு)ஆக்கிரமிப்பு அகலுமா?திருப்பூர், எஸ்.ஆர்., நகர் தெற்கு வீதியில் வாகனங்கள் சாலையில் இடையூறாக நிறுத்தப்படுகிறது. எதிர்புறம் டிரான்ஸ்பார்மர் இடைஞ்சலாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- அருண், எஸ்.ஆர்., நகர். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, பெட்ரோல் பங்க் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் கால்வாயில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையை சீரமைக்க வேண்டும்.- சுந்தரி, பாளையக்காடு. (படம் உண்டு)பாதுகாப்பு அவசியம்திருப்பூர், கணியாம்பூண்டி - காவிலிபாளையம் சாலையில் ரோட்டோரத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கனரக, இருசக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி விழுந்தால், ஆபத்து நிச்சயம். ரோட்டோரத்தில் பாதுகாப்பு வசதி ஏற்படுத்திட வேண்டும்.- சக்திவேலு, கணியாம்பூண்டி. (படம் உண்டு)தடுப்புச்சுவர் சேதம்திருப்பூர், பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி முன்புற தடுப்புச்சுவர், வாகனம் மோதி சேதமடைந்துள்ளது. மேலும் சேதமாகி விழும் முன், சீரமைத்திட வேண்டும்.- கருப்புசாமி, பல்லடம் ரோடு. (படம் உண்டு)சாலை சீராகுமா?திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, மேல்நிலை நீர்தேக்க தொட்டி முன்புறம் சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- ராம்பிரகாஷ், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)பயணியர் தவிப்புதிருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகர் ஸ்டாப்பில் நிழற்குடை முன் விளம்பர பதாகை வைக்கப்படுகிறது. பஸ் ஏற காத்திருக்கும் மக்கள் நிற்க இடமில்லை.- மனோகர், பாண்டியன் நகர். (படம் உண்டு)ரியாக் ஷன்ஒளிர்கிறது விளக்குதிருப்பூர் எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப் ரயில்வே உயர்மட்ட பாலத்தில், தெருவிளக்கு எரியாதது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்ததால், தெருவிளக்கு ஒளிர்கிறது.- ஜெயசங்கர், சேர்மன் கந்தசாமி நகர். (படம் உண்டு)டிரான்ஸ்பார்மர் சீரமைப்புஊத்துக்குளி, எஸ்.பெரியபாளையம் ஊராட்சி, குளத்துப்பாளையம், விநாயகர் கோவில் வீதியில் டிரான்ஸ்பார்மர் விரிசல் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. 'தினமலர்' செய்தி வெளியான பின், சரி செய்துள்ளனர்.- மோகன், குளத்துப்பாளையம். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி