உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஈரோடு கொங்கு கல்லுாரியில் படித்தவருக்கு வெளிநாடு வேலை

ஈரோடு கொங்கு கல்லுாரியில் படித்தவருக்கு வெளிநாடு வேலை

திருப்பூர்: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறையில் பயின்ற மாணவர்கள், கல்லுாரி வேலைவாய்ப்பு துறையின் மூலம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது: எங்கள் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் 15 பேர், உலகிலேயே உணவு பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடான டிரானாவில் உள்ள புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் (BOUGAINVILLE BAY RESORT AND SPA), ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.டிரானா நாட்டிற்கு செல்வதற்கான விமான டிக்கெட், தங்குமிடம், உணவு அகியவற்றையும், ஓட்டல் நிர்வாகமே பொறுப்பேற்று, மாணவர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கியுள்ளது. கல்லுாரியில் தற்போது முதலாமாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களும், பகுதி நேரமாக ஈரோட்டில் உள்ள சிறந்த ஓட்டல்களில் பணியாற்றி வருகின்றனர்.கடந்த ஆண்டுகளில் படித்த மாணவர்களும், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, மலேசியா, மாலத்தீவு, துபாய், அபுதாபி, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் பணிபுரிந்து வருகின்றனர். எங்கள் மாணவர்கள் ஆண்டுதோறும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை, தாளாளர் தங்கவேல், கல்லுாரி முதல்வர் வாசுதேவன் மற்றும் உணவு, விடுதி மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை