உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தனியார் துறைகளில் 51 பேருக்கு வேலை

 தனியார் துறைகளில் 51 பேருக்கு வேலை

திருப்பூர்: கலெக்டர் அலுவலக வளாக, நான்காவது தளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார். ஆடை உற்பத்தி, நகை கடை உள்பட 27 நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான அலுவலர்களை, நேர்காணல் வாயிலாக தேர்வு செய்தனர். முகாமில், 55 ஆண்கள்; 59 பெண்கள் என, மொத்தம் 114 வேலை தேடுவோர் பங்கேற்றனர். 25 ஆண்கள்; 26 பெண்கள் என, மொத்தம் 51 பேர், தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை