ஏ.கே.ஆர். பள்ளியில் நவராத்திரி விழா
திருப்பூர்; அவிநாசி அருகே அணைப்புதுாரிலுள்ள ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் 16ம் ஆண்டு நவராத்திரி விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தினமும் மாலை 6:30 மணிக்கு கொலு பூஜை, அதைத்தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.