உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் ; தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழறிஞர்கள், அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் சிறந்தவர்களுக்கு, திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக தொண்டு செய்தோருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் தமிழக அரசு விருது வழங்குகிறது.நடப்பு 2024 - 25ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதுக்கு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அலுவலக வளாக முதல் தளம், அறை எண்: 113 ல் செயல்படும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை