உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடைமேம்பாலத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம் மின் கம்பங்களால் ஷாக் அடிக்கும் அபாயம்

நடைமேம்பாலத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம் மின் கம்பங்களால் ஷாக் அடிக்கும் அபாயம்

மின்வாரியம் கவனத்துக்கு

பல்லடம், உப்பிலிபாளையத்தில் மின்கம்பிகளுக்கு ஒட்டியபடி மரக்கிளைகள் செல்கிறது. அடிக்கடி தீப்பொறி பறக்கிறது. மரக்கிளைகளை வெட்ட வேண்டும்.- செந்தில்குமார், உப்பிலிபாளையம். (படம் உண்டு)பெருமாநல்லுார், பனங்காடு பகுதியில் மின்கம்பத்தில் செடி கொடிகள் படர்ந்துள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குட்டிகுமார், பனங்காடு. (படம் உண்டு)திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் பாலத்தில் மின்கம்பத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்துள்ளது.- ஜெயராஜ், அணைக்காடு. (படம் உண்டு)குழியை மூட வேண்டும்திருப்பூர், 15 வேலம்பாளையம், 25வது நம்பர் பஸ் நிற்கும் ஸ்டாப்பில், சாலை சேதமாகி குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். குழியை மூட வேண்டும்.- கார்த்தி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் அருகே, புதுராமகிருஷ்ணபுரம் மெயின் வீதியில் குழாய் உடைந்து தினசரி தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சீர்செய்ய வேண்டும்.- அமுதாநிலா, புதுராமகிருஷ்ணபுரம். (படம் உண்டு)திருப்பூர், 51வது வார்டு, குறிஞ்சி நகர் விரிவு பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- மணிகண்டன், குறிஞ்சிநகர் விரிவு. (படம் உண்டு)தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், லட்சுமிநகர், முல்லை வீதியில் ஒரு வாரமாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்ற வேண்டும்.- மணிகண்டன், முல்லைவீதி. (படம் உண்டு)திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் கோவை பஸ்கள் நிற்குமிடத்தில் உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றிட வேண்டும்.- தினேஷ்குமார், காமராஜர் ரோடு. (படம் உண்டு)திருப்பூர், பழைய எஸ்.பி., ஆபீஸ் அலுவலக அருகே, சிங்கார வேலன் நகர், செல்வலட்சுமி நகரில் இரண்டு வாரங்களாக தெருவிளக்கு எரிவதில்லை.- லோகநாதன், செல்வலட்சுமிநகர். (படம் உண்டு)குழியை மூட வேண்டும்.திருப்பூர், லட்சுமி நகர் மெயின் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோவில் வளைவில் தரைப்பாலம் குழியாகி ஆபத்தான நிலையில் உள்ளது. சீரமைத்திட வேண்டும்.- சின்னான், லட்சுமிநகர். (படம் உண்டு)வீணாகும் மின்சாரம்திருப்பூர், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் மதிய வேளையிலும் தெருவிளக்குகள் தொடர்ந்து எரிவதால், மின்சாரம் வீணாகிறது.- அண்ணாதுரை, கோவில்வழி. (படம் உண்டு)சுத்தம் செய்யலாமேதிருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா ரவுண்டானா உயர்மட்ட பாலத்தில் இரவில் விரும்பதகாத செயல்கள் நடக்கிறது. குப்பை தேங்குவதால், சுகாதாரக்கேடாக உள்ளது.- ஈஸ்வரன், அவிநாசி ரோடு. (படம் உண்டு)குப்பை அள்ளுங்க...திருப்பூர், தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.- வின்சென்ட், பொல்லிக்காளிபாளையம். (படம் உண்டு)திறப்பது எப்போது?திருப்பூர், கருமாரம்பாளையம் ரேஷன் கடை அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ளது. திறந்தால் பலருக்கும் பயன்படும்.- நடராஜன், தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)--------------------------------ரியாக் ஷன்தெருவிளக்கு 'பளிச்'திருப்பூர், அங்கேரிபாளையம், டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதியில் தெருவிளக்கு எரியவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதமழில் . மாநகராட்சி வாயிலாக, தெருவிளக்கு மாற்றப்பட்டு, பளிச்சிடுகிறது.- லோகநாதன், டீச்சர்ஸ்காலனி. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி