எரிந்த வீடுகள்... கருகிய கனவுகள்!
திருப்பூர், கல்லாம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள தகர செட் குடியிருப்பில், நேற்று மதியம், காஸ் சிலிண்டர்கள்வெடித்ததில், மொத்தம், 42 தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து சாம்பலானது. பல மாதங்கள் உழைத்து சம்பாதித்து,ஆசை ஆசையாக வீட்டில் வாங்கி வைத்த பொருட்கள், நொடிப்பொழுதில் கருகி சாம்பலானது.