மேலும் செய்திகள்
மார்கழியை முன்னிட்டு கலர் கோலப்பொடிகள் விற்பனை
13-Dec-2025
உடுமலை: மார்கழி மாதத்தில், வீடுகளின் முன் வண்ணக்கோலமிட்டு, பிள்ளையார், பூசணி பூ அமைத்து, மாதம் முழுவதும் வழிபாடு நடத்துவதை பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். மார்கழி மாதத்தை முன்னிட்டு, உடுமலை சந்தை ரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் வண்ணக் கோலப்பொடி விற்பனை சூடு பிடித்துள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு, கருப்பு போன்ற பல வண்ணங்களில் கோலப்பொடிகள், ஒரு பாக்கெட் ரூ.10 முதல், ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
13-Dec-2025