நுகர்வோர் விழிப்புணர்வு போட்டி
அவிநாசி; அவிநாசி நுகர்வோர் மன்றம் மற்றும் திருப்பூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் சார்பில்,அவிநாசி அரசு கல்லுாரியில் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. ஓவியம் வரைதல், கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் அருண் விழாவை ஒருங்கிணைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.