உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர்சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெரிசல்

உழவர்சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெரிசல்

உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வருகின்றனர். உழவர்சந்தையின் வெளியில், ரோட்டில் காலை நேரங்களில் தற்காலிக காய்கறி உட்பட பல்வேறு கடைகள் போடப்படுகின்றன. இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாமலும், பிற வாகனங்கள் செல்வதிலும் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !