உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட விளையாட்டு போட்டி; 10 நாட்கள் நடத்த ஆயத்தம்

மாவட்ட விளையாட்டு போட்டி; 10 நாட்கள் நடத்த ஆயத்தம்

உடுமலை; பள்ளி கல்வித்துறை, விளையாட்டுத்துறை சார்பில் தனிநபர், குழு விளையாட்டுகளில் திறமையான வீரர்களை தேர்வு செய்ய, திருப்பூர் குறுமைய, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று (6ம் தேதி) துவங்குகிறது. திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளியில் செஸ் போட்டி, 6ல் நடக்கிறது. 7ம் தேதி டீ பப்ளிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ், புல்வெளி டென்னிஸ் போட்டி, உடுமலை சார்க் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்குவாஷ் நடக்கிறது. 15 வேலம்பாளையம், டிரிக் அகாடமியில், வரும், 8ம் தேதி இருபாலருக்கான நீச்சல், நிப்ட்-டீ கல்லுாரியில் மாணவியர் டேக்வாண்டோ போட்டி நடக்கிறது. இக்கல்லுாரியில், 9ம் தேதி, மாணவர் டேக்வாண்டோ போட்டி, நஞ்சப்பா பள்ளியில் மாணவ, மாணவியர் கேரம், சிக்கண்ணா கல்லுாரியில் சைக்கிளிங் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும், 10ல் ஜிம்னாஸ்டிக்ஸ் - நஞ்சப்பா பள்ளியில், அதே நாளில் சிலம்பம் 'நிப்ட் - டீ' கல்லுாரியில் நடக்கிறது. 13ல், வித்யவிகாசினி பள்ளியில், மாணவருக்கு டென்னிகாய்ட், நிப்ட்-டீ கல்லுாரியில், வாள்சண்டை, 14ல் நஞ்சப்பா பள்ளியில், குத்துச்சண்டை, வித்யவிகாசினி பள்ளியில், மாணவியருக்கு டென்னிகாய்ட் போட்டி நடக்கிறது. மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில், 15ல் தேதி, இருபாலருக்கான பேட்மின்டன் போட்டி ஆகியன நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ