உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதியம் தலைகாட்டாதீங்க... அனல்.. 109 டிகிரி பாரன்ஹீட் தொடும்

மதியம் தலைகாட்டாதீங்க... அனல்.. 109 டிகிரி பாரன்ஹீட் தொடும்

திருப்பூர் : திருப்பூரில் வெப்பநிலை 109 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'இந்தியாவின் அதிவெப்ப நகரங்களின் வரிசையில், ஈரோடு இரண்டாம் இடம் பிடித்த நிலையில், அங்கு நிலவிய வெப்பநிலையை இந்த வாரம், திருப்பூரில் உணர முடியும்' என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.கோடை வெயிலின் உக்கிரம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில், வரலாறு காணாத வெயில் நிலவுகிறது. அருகேயுள்ள ஈரோடு மாவட்டத்தில், 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது; இது, 'இந்திய அளவில், அதிவெப்பம் நிலவும் நகரங்களின் வரிசையில், 2வது இடம்' என தெரிவிக்கப்பட்டது; அந்தளவு வெயிலின் உக்கிரம் உள்ளது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டத்தில், வரும், 28ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, 41 முதல், 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். (அதாவது, 105.8 டிகிரி பாரன்ஹீட் முதல், 109.4 டிகிரி பாரன்ஹீட்) என, கூறப்பட்டுள்ளது.இதன் மூலம், நாட்டின் அதி வெப்ப நகரங்களின் பட்டியலில் திருப்பூரும் இணையும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம், 36 முதல், 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது, குறிப்பிடத்தக்கது.திருப்பூரில், குறைந்தபட்ச வெப்ப நிலை, 27 முதல், 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காற்றின் ஈரப்பதம், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. மணிக்கு, 8 முதல், 12 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மதிய நேரங்களில், 12:00 முதல், 3:00 மணி வரை அதிக வெயில் எதிர்பார்க்கப்படுவதால், இயன்றவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை மாலை, 4:00 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு விடுவது நல்லது.இவ்வாறு, வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீர்ச்சத்து குறையக்கூடாது

திருப்பூர் டாக்டர் முருகநாதன் கூறியதாவது;வீடுகளில் இருப்பவர்களுக்கே கோடை வெப்பத்தை தாங்க முடியவில்லை; மின் விசிறியின் காற்றும் கூட போதுமானதாக இருப்பதில்லை. வேலைக்கு செல்பவர்கள் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்த்து, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. பெண்கள், தங்கள் வீடுகளில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்வதற்குள் வியர்த்து, சோர்வடைகின்றனர்; அவர்கள் குடை எடுத்து செல்வது நல்லது.உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'நீரின்றி அமையாது உலகு; நீரை பழுதின்றி காய்ச்சி பருகு' என்பது மருத்துவர்களின் அறி வுரை; தண்ணீர் பற்றாக்குறையால் குடிநீர் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டதாக கூட இல்லாமல் போகலாம்; எனவே, நீரை காய்ச்சி ஆற வைத்து பருகுவது நல்லது. பாதுகாக்கப்படாத நீரை பருகுவதால் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ