உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் வீசப்பட்ட காலாவதி பொருட்கள்

ரோட்டில் வீசப்பட்ட காலாவதி பொருட்கள்

பல்லடம் ; பல்லடம், - திருப்பூர் ரோடு, தெற்குபாளையம் பிரிவு அருகே, காலாவதியான சிப்ஸ் பாக்கெட்கள், ரோட்டோரத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.சமீபத்தில்தான், பல்லடம் -- உடுமலை ரோடு, சித்தம்பலம் அருகே, இதேபோல், நுாற்றுக்கணக்கான ரஸ்க் பாக்கெட்கள் குவியல், விளைநிலத்தை ஒட்டி ரோட்டோரத்தில் வீசப்பட்டிருந்தன. இவ்வாறு காலாவதி உணவு பொருட்களை பொது இடங்களில்வீசி செல்வதால், மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் அவற்றை உண்டு பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி